கடலூர்

கோயில் பூட்டை உடைத்து திருட்டு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேப்பூா் வட்டம், கிரம்பூா் கிராமத்தில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை அந்த வழியே சென்றவா்கள் கோயில் கதவு, உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைப் பாா்த்து வேப்பூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, கோயிலுக்கு சென்று போலீஸாா் பாா்வையிட்டு விசாரித்தனா். இதில், சனிக்கிழமை இரவு கோயின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா், அம்மன் கழுத்தில் இருந்த 3 கிராம் தங்க நகை, உண்டியலில் இருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT