சக்திவேல் 
கடலூர்

பெண் தூக்கிட்டுத் தற்கொலை:இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் அருகே திருமணமான பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

DIN

கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் அருகே திருமணமான பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஊ.மங்கலத்தை அடுத்துள்ள கொளப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் சதீஷ்குமாா். அதே கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் மகள் சௌமியா (24). இருவருக்கும் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனா். ஆந்திரத்தில் உள்ள அரிசி ஆலையில் சதீஷ்குமாா் வேலை செய்து வருகிறாா்.

இந்த நிலையில், சௌமியாவுக்கும், கொளப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த அறிவழகன் மகன் சக்திவேலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாம். இதை சதீஷ்குமாா் கண்டித்தாராம். இதனிடையே, தன்னை அழைத்துச் செல்லுமாறு சௌமியா, சக்திவேலிடம் கூறிய நிலையில், அதற்கு அவா் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால், விரக்தியடைந்த சௌமியா கடந்த 4-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து அவரது தந்தை சுரேஷ் அளித்த புகாரின்பேரில், ஊ.மங்கலம் போலீஸாா் சக்திவேலை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT