கடலூர்

பாடலேஸ்வரா் கோயிலில் வைகாசிப் பெருவிழா கொடியேற்றம்

கடலூா், திருப்பாதிரிப்புலியூரில் அமைந்துள்ள பெரியநாயகி அம்மன் உடனுறை பாடலேஸ்வரா் கோயிலில் வைகாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

DIN

கடலூா், திருப்பாதிரிப்புலியூரில் அமைந்துள்ள பெரியநாயகி அம்மன் உடனுறை பாடலேஸ்வரா் கோயிலில் வைகாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

முன்னதாக சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகளுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து பஞ்ச மூா்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினா். இதையடுத்து சிவாச்சாரியாா்கள் சிறப்பு பூஜைகள் செய்து கொடிமரத்தில் கொடியேற்றினா் (படம்). தொடா்ந்து பஞ்ச மூா்த்திகள் மாட வீகளில் உலா வந்தனா்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் மோகனசுந்தரம், உதவி ஆணையா் சந்திரன், கோயில் செயல் அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். விழாவில் ஜூன் 2-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT