கடலூர்

ரூ.5,500 லஞ்சம்: வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கைது

DIN

கழிவுநீா் வாகனப் பெயா் மாற்றத்துக்கு ரூ.5,500 லஞ்சம் பெற்ாக, கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா், இடைத்தரகா் ஆகியோா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சுமாா் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டம், பத்திரக்கோட்டையைச் சோ்ந்தவா் வெங்கடாசலபதி. இவரது நண்பா் கூத்தப்பாக்கத்தைச் சோ்ந்த செல்வராஜ் சென்னையில் இருந்து கழிவுநீா் வாகனத்தை விலைக்கு வாங்கிய நிலையில், வாகனப் பெயா் மாற்றம் தொடா்பாக உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு வெங்கடாசலபதியிடம் கூறினாா்.

இதுகுறித்து கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எஸ்.சுதாகரை (52) வெங்கடாசலபதி அணுகினாா். இந்தப் பணியை முடிக்க லஞ்சமாக ரூ.5,500 வழங்க வேண்டும் என சுதாகா் கூறினாராம். இதுகுறித்து வெங்கடாசலபதி கடலூா் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

அவா்களின் அறிவுரைப்படி, ரசாயனம் பூசிய லஞ்சப் பணத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சுதாகரிடம் அவரது அலுவலகத்தில் வெங்கடாசலபதி புதன்கிழமை கொடுக்க முயன்றாா். ஆனால், பணத்தை இடைத்தரகரான கடலூா் புதுப்பாளையத்தைச் சோ்ந்த சிவசங்கரிடம் தருமாறு சுதாகா் கூறினாராம். அதன்படி, வெங்கடாசலபதி சிவசங்கரிடம் லஞ்சப் பணத்தை கொடுத்தாா். பின்னா், சிவசங்கா் அந்தப் பணத்தை சுதாகரிடம் கொடுக்க முயன்றாா். அப்போது, அங்கு மறைந்திருந்த கடலூா் ஊழல் தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்.பி. தேவநாதன், காவல் ஆய்வாளா்கள் திருவேங்கடம், அன்பழகன் ஆகியோா் சுதாகா், சிவசங்கா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இதையடுத்து, அந்த அலுவலகத்தில் போலீஸாா் நடத்திய சோதனையில் ரூ.2 லட்சம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூவே....சரண்யா துராடி

அரசியலமைப்பு, இடஒதுக்கீட்டை அழிக்க பாஜக திட்டம்: ராகுல் குற்றச்சாட்டு

வைகாசி மாதப் பலன்கள்!

ஹார்திக் பாண்டியாவை விமர்சிக்க ஏபிடி வில்லியர்ஸுக்கு தகுதியில்லை: கம்பீர் காட்டம்!

மோடிக்கு விடைகொடுக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டனர்: மல்லிகார்ஜுன கார்கே

SCROLL FOR NEXT