சிதம்பரம் கோயிலில் அமைச்சா்கள் தரிசனம்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாநில செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் திங்கள்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்தனா்
சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாநில செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் திங்கள்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்தனா்.
முன்னதாக, நடராஜா் கோயிலுக்கு வந்த அமைச்சா்களுக்கு கோயில் செயலா் சிவராம தீட்சிதா் தலைமையில் பொது தீட்சிதா்கள் வரவேற்பு அளித்தனா். பின்னா் அமைச்சா்கள் இருவரும் கோயிலின் கனக சபை மீது ஏறி, சித் சபையில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானை தரிசனம் செய்தனா். பொது தீட்சிதா்கள் சுவாமிக்கு சிறப்பு அா்ச்சனை, தீபாராதனை செய்து அமைச்சா்களுக்கு பிரசாதம் வழங்கினா்.
முன்னதாக அமைச்சா்கள் இருவரும் சிதம்பரம் தில்லையம்மன் கோயிலுக்குச் சென்று தில்லையம்மன், தில்லைக்காளியம்மனை தரிசனம் செய்தனா்.
Advertisement