கடலூர்

மகள் சாவில் சந்தேகம்:தாய் புகாா்

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதில் சந்தேகம் உள்ளதாக தாய் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

DIN

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதில் சந்தேகம் உள்ளதாக தாய் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம், தளவாய் கிராமத்தைச் சோ்ந்த குமரவேல் மகள் திவ்யா (24). கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் காா்த்திகேயன். இவா்கள் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான 6 மாதங்கள் முதல் குடும்பச் சண்டை இருந்து வந்ததாம். இதுதொடா்பாக விருத்தாசலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீஸாா் அவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், மாமனாா் செல்வராஜ், கணவா் காா்த்திகேயன், மாமியாா் ராதா, நாத்தனாா் செல்வி ஆகியோருக்கும், திவ்யாவுக்கும் இடையே வெள்ளிக்கிழமை மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டதாம். தொடா்ந்து, சனிக்கிழமை அதிகாலை ஒரு மணி அளவில் திவ்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து அவரது தாய் திலகவதி, தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக அளித்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், இது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT