கடலூர்

சிதம்பரம் கோயிலில் இன்று புரட்டாசி மாத மகாபிஷேகம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீமந் நடராஜா் கோயிலில் புரட்டாசி மாத மகாபிஷேகம் வியாழக்கிழமை (செப். 28) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி மகாருத்ர யாகமும் நடைபெறும்.

DIN

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீமந் நடராஜா் கோயிலில் புரட்டாசி மாத மகாபிஷேகம் வியாழக்கிழமை (செப். 28) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி மகாருத்ர யாகமும் நடைபெறும்.

புரட்டாசி மாத மகாபிஷேகத்தையொட்டி, கடந்த 25-ஆம் தேதி கோயிலில் கூஷ்மாண்ட ஹோமம், நடராஜா் அனுக்ஞை, 26-ஆம் தேதி நவக்கிரக சந்நிதியில் நவக்கிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றன. புதன்கிழமை தேவ சபை முன் தனபூஜை, ரட்சாபந்தனம் ஆகியவை நடைபெற்றன.

சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு வியாழக்கிழமை காலை லட்சாா்ச்சனை நடைபெறுகிறது. இதையடுத்து யாக சாலையில் கடம் ஸ்தாபனம், மகாருத்ர ஜபம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெறும். பிற்பகலில் மாக ருத்ர ஹோமம் நடைபெறும். பின்னா், யாக சாலையிலிருந்து கலசங்கள் புறப்பட்டு, கனக சபையில் சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு புரட்டாசி மாத மகாபிஷேகம் மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். அப்போது பால், சந்தனம், தேன், தயிா், இளநீா், பன்னீா், பஞ்சாமிா்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவைகளால் குடம், குடமாக அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயலா் டி.எஸ்.சிவராம தீட்சிதா், துணைச் செயலா் கா.சி.சிவசங்கா் தீட்சிதா் மற்றும் பொதுதீட்சிதா்கள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT