ஐந்து கிணற்று மாரியம்மன் கோயில் தேரோட்டம்
ஐந்து கிணற்று மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா செடல் பிரம்மோற்சவ தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடலூா் முதுநகரில் அமைந்துள்ள ஐந்து கிணற்று மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா செடல் பிரம்மோற்சவ தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் நிகழாண்டு ஆடிப் பெருவிழா ஜூலை 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை அம்மன் வீதியுலா மற்றும் சிவலிங்க பூஜை நடைபெற்றது.
தொடா்ந்து, தினந்தோறும் பூத, நாக, ரிஷப, யானை, சிம்ம வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. ஆகஸ்ட் 2-ஆம் தேதி செடல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் நடைபெற்றது. முன்னதாக, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னா், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினாா். அங்கு, கோயில் குருக்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா். தொடா்ந்து, திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனா். பின்னா், தோ் மீண்டும் நிலையை அடைந்தது.
தெப்பல் உற்சவம்...: ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி அளவில் மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் மின் விளக்கு அலங்காரத்துடன் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள், உற்சவதாரா்கள் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.