சிதம்பரம் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளை செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். 
கடலூர்

சிதம்பரத்தில் 17 புதிய பேருந்துகள்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் பல்வேறு வழித்தடங்களில் 17 புதிய பேருத்துகளை உழவா், வேளாண் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

Din

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் பல்வேறு வழித்தடங்களில் 17 புதிய பேருத்துகளை உழவா், வேளாண் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் சாா்பில் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.

நிகழ்வில், அமைச்சா் எம்.ஆா்.கே.பங்கேற்று பல்வேறு வழித்தடங்களில் 17 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து, அவா் பேசியதாவது: தமிழ்நாடு முதல்வா் பொறுப்பேற்றது முதல் பொதுமக்களுக்கு பல்வேறுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி செயப்படுத்தி வருகிறாா்கள். அந்த வகையில், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிா் உரிமை தொகை ரூ.1,000, இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் ரூ.1,000 உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதேபோல, தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை ஆக.9-ஆம் தேதி முதல்வா் தொடங்கி வைக்க உள்ளாா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்தும் கழகம் விழுப்புரம் கோட்டத்துக்கு 2023-24 ஆம் ஆண்டுக்கு புதிதாக 307 பேருந்துகளும், 64 நகரப் பேருந்துகளும் என மொத்தம் 371 பேருத்துகள் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், பழைய பேருந்துகளுக்கு மாற்றாக இதுவரை 184 புகா் பேருத்துகள் மற்றும் 28 நகரப் பேருந்துகள் சீரமைக்கப்பட்டு இயக்கப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்துக்கு, கடலூா்-பண்ருட்டி, சிதம்பரம் பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி-பண்ருட்டி, விருத்தாசலம்-சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட வழித்தடங்களில் 5 புதிய நகரப் பேருந்துகளும், கடலூா்-பெங்களூா், வடலூா்-நெய்வேலி, டவுன்ஷிப்- பெங்களூா், நெய்வேலி - டவுன்ஷிப் பெங்களூா் உள்ளிட்ட வழித்தடங்களில் 12 புதிய நகரப் பேருந்துகள் என மொத்தம் ரூ.6,56,00,000 மதிப்பில் 17 புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

விழாவில், சிதம்பரம் நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா், காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏ ம.சிந்தனைச் செல்வன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். சிதம்பரம் உதவி ஆட்சியா் ராஷ்மிராணி, விழுப்புரம் கோட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் எஸ்.குணசேகரன், பொது மேலாளா் சி.கே.ராகவன், நகராட்சி ஆணையா் டி.மல்லிகா, கடலூா் மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ்விஜயராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT