விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம். 
கடலூர்

விருத்தகிரீஸ்வா் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாணம்

Din

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம்.

சிதம்பரம், ஆக.8:

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் அருள்மிகு பாலாம்பிகை, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரா் திருக்கோயில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை அதிகாலை விமரிசையாக நடைபெற்றது.

இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு ஜூலை 29-ம் தேதி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றப்பட்டு அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெற்றது.

விருத்தாம்பிகை அம்மனுக்கு வியாழக்கிழமை அதிகாலை திருமாங்கல்யதாரணம் நடைபெற்றது. இதையொட்டி விநாயகா், முருகன், விருத்தகிரீஸ்வரா், பாலாம்பிகை, விருத்தாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் விருத்தாம்பிகை அம்மனுக்கு திருமாங்கல்யதாரணம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு கண்டு தரிசித்தனா்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT