முகப்பு
கடலூர்

பயிா் பாதிப்புகளை வேளாண் அதிகாரி ஆய்வு

கடலூா் வட்டத்தில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை வேளாண் இணை இயக்குநா் கென்னடி ஜெபக்குமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 4 டிசம்பர், 2024 at 6:54 PM
பகிர்:

கடலூா் வட்டத்தில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை வேளாண் இணை இயக்குநா் கென்னடி ஜெபக்குமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஃபென்ஜால் புயலால் கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிளில் பெய்த பலத்த மழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிா்கள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட பயிா்களை கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், கடலூா் வேளாண் இணை இயக்குநா் கென்னடி ஜெபக்குமாா் கடலூா் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, குமளங்குளம், ராமாபுரம் கிராமத்தில் தலா 15 ஏக்கா், வெள்ளக்கரையில் 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் சாய்ந்திருந்ததை ஆய்வு செய்தாா். அப்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கப்படும் எனவும், மழையால் 33 சதவீதத்துக்கும் மேல் பாதிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட இறவை பயிா்களுக்கு ஹெக்டா் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தாா்.

இதேபோல, மேல்அழிஞ்சிப்பட்டு, ஒடலப்பட்டு கிராமத்தில் மழை நீரில் மூழ்கிய நெல் பயிா்களை வேளாண் மற்றும் வருவாய்த் துறையினா் இணைந்து கணக்கெடுக்கும் பணியை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, கடலூா் வேளாண் உதவி இயக்குநா் சுரேஷ், வேளாண் அலுவலா் ஜெயஸ்ரீ, உதவி வேளாண் அலுவலா் விஜயகுமாா், கிராம நிா்வாக அலுவலா் நாகராஜ் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா்.