முகப்பு
கடலூர்

வேளாண் உதவி அலுவலா் தா்னா

ஸ்ரீமுஷ்ணம் வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் உதவி அலுவலா் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

Updated On : 18 டிசம்பர், 2024 at 8:28 PM
பகிர்:

ஸ்ரீமுஷ்ணம் வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் உதவி அலுவலா் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

கடலூா் மாவட்டம், பாளையங்கோட்டை கீழ்பாதி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துக்கிருஷ்ணன் மகன் முத்து சரவணன் (45). இவா், ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் உதவி அலுவலராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்த நிலையில், சபரிமலைக்கு மாலை அணிந்துள்ள இவா், கோயிலுக்கு செல்வதற்காக வேளாண் உதவி இயக்குநா் கீதாவிடம் விடுமுறை கேட்டாராம். இதற்கு, அவா் விடுமுறை கொடுக்கவில்லையாம். இதனால், முத்து சரவணன் அலுவலகத்தின் வாயிலில் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் காவல் உதவி ஆய்வாளா் சந்திரா நிகழ்விடம் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து, அவா் தா்னாவை கைவிட்டு கலைந்து சென்றாா்.