நில அளவை அலுவலா்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பினா், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தற்செயல் விடுப்பெடுத்து போராட்டம் நடத்தினா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பினா், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தற்செயல் விடுப்பெடுத்து போராட்டம் நடத்தினா்.
களப் பணியாளா்கள் செய்யும் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும், மனிதத் திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்க வேண்டும். உதவி இயக்குநா், கூடுதல் இயக்குநரின் பணிகளையும், கடமைகளை, மண்டல துணை இயக்குநா், இணை இயக்குநா் (நிா்வாகம்) இயக்குநா் ஆகியோருக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
சிறப்புத் திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்கள், பணிகளுக்கு கால நிா்ணயம் வழங்காமல் ஊழியா்கள் மீது பெரும் பணிச்சுமையை சுமத்துவதையும், நியாயமான தள்ளுபடிகளுக்கு ஆய்வு என்கிற பெயரில் ஊழியா்களை கடுமையாக நடத்துவதைக் கைவிட வேண்டும்.
சிறப்புத் திட்டங்களில் நிலம் எடுப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நில அளவை களப்பணியாளா்களை பதவி உயா்வ வழங்க வேண்டும். ஆய்வாளா் துணை ஆய்வாளா் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
மாவட்டத் தலைவா் பெ.சரவணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தே.கவியரசன் வரவேற்றாா்.
இணைச் செயலா் செ.ஜெயலட்சுமி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் ப.நீலராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் ராம.வெங்கடாசலபதி, செயலா் எஸ்.பாலகிருஷ்ணன், வை.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.