முகப்பு
கடலூர்

வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

கடலூா் முதுநகா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா். இதையடுத்து உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 23 டிசம்பர், 2024 at 6:26 PM
பகிர்:

நெய்வேலி: கடலூா் முதுநகா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா். இதையடுத்து உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் முதுநகா், குடிகாடு பகுதியில் வசித்து வந்தவா் கந்தசாமி மகன் சுகனேஷ்(33). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது பைக்கில் கடலூரிலிருந்து குடிகாடுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சுகனேஷ் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்து கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதையறிந்த சுகனேஷின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் கடலூா்-சிதம்பரம் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த கடலூா் முதுநகா் போலீஸாா் அங்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்து அதன் ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். போலீஸாா் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →