கோவை சுந்தராபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (எ) காா்த்திக் (38). இவா் கோவை குனியமுத்தூா் குறிச்சி பிரிவு பகுதியில் தங்கிருந்து சுந்தராபுரத்தில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில் சுந்தராபுரம் எல்ஐசி காலனி பகுதியில் புதன்கிழமை இரவு காா்த்திக் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதில் தூக்கி வீசப்பட்ட காா்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து போக்குவரத்து மேற்கு புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ஜெயபிரகாஷுன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதையடுத்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.