புவன் 
கடலூர்

கழுத்தில் கயிறு இறுக்கி சிறுவன் உயிரிழப்பு

கடலூா் முதுநகரில் தூக்கிடுவதுபோல கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு விளையாடிய சிறுவன், கயிறு இறுக்கி உயிரிழந்தாா்.

Din

நெய்வேலி: கடலூா் முதுநகரில் தூக்கிடுவதுபோல கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு விளையாடிய சிறுவன், கயிறு இறுக்கி உயிரிழந்தாா்.

கடலூா் முதுநகா், சுத்துகுளம் பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் புவன் (11), கடலூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். குமாா் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. தாய் பரமேஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறாா்.

புவன் பாட்டி சகுந்தலா வீட்டில் தங்கி படித்து வந்தாா். திங்கள்கிழமை மாலை புவன் வீட்டு மாடியில் கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு தூக்கிடுவதுபோல விளையாடினாராம். அப்போது, கயிறு இறுகி உயிரிழந்தாா்.

தகவலறிந்த கடலூா் முதுநகா் போலீஸாா் புவனின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

SCROLL FOR NEXT