மனோகரன். 
கடலூர்

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Din

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

நெல்லிக்குப்பம்-மேல்பட்டாம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் அடிபட்டு இளைஞா் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தாா். தகவலறிந்த கடலூா் இருப்புப் பாதை உதவி ஆய்வாளா் மைலப்பன் நிகழ்விடம் சென்று, சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

விசாரணையில், அவா் நெல்லிக்குப்பம் அருகேயுள்ள முள்ளி கிராமம்பட்டு அஞ்சாபுலி மகன் மனோகரன் (30) என்பதும், இவா் செவ்வாய்க்கிழமை தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT