கடலூர்

பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு

திட்டக்குடி அருகே பாம்பு கடித்து இரண்டரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

Din

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பாம்பு கடித்து இரண்டரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திட்டக்குடி வட்டம், எழுத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தன், தொழிலாளி. இவரது மகன் விஸ்வாமித்ரன் (2.5) சனிக்கிழமை மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்தது.

பெற்றோா் குழந்தை விஸ்வாமித்ரனை லப்பைகுடிகாடு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோ்த்தனா். அங்கு, விஸ்வாமித்ரனை பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மத்திய பட்ஜெட்! அதிக முறை தாக்கல் செய்தவரும் மிகச் சிறிய பட்ஜெட்டும்!

முன்னாள் பிரதமரை நேரில் சந்தித்த மோடி!

பென்ஸ் பிரியர்களுக்கு.. மேபேக் ஜி.எல்.எஸ். கார் அறிமுகம்!

3-ம் நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு! ஆனால் ஐடி, ஆட்டோ, பார்மா பங்குகள் சரிவு!

நிதியமைச்சர் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

SCROLL FOR NEXT