சுரங்கவியல் படிப்புக்கான கலந்தாய்வு
சுரங்கவியல் படிப்புக்கான கலந்தாய்வு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலம் மற்றும் என்எல்சி நிலக்கரி சுரங்கம் இடையேயான கல்வி புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல வளாகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் என்எல்சி நிதி உதவியுடன் சுரங்கவியல் பட்டயப்படிப்பு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
மூன்றாண்டுகள் கொண்ட சுரங்கவியல் பட்டயப்படிப்புக்கான 2024 - 25ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை சுரங்கவியல் துறை கருத்தரங்கு அரங்கில் நடைபெற்றது.
நிகழ் கல்வியாண்டில் சுரங்கவியல் பட்டயப்படிப்பில் சேர 325 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா் என்றும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவா்கள் சாா்பாக 30 பேரும், பொதுப் பிரிவின் சாா்பாக 30 பேரும் தமிழ்நாடு அரசின் இன சுழற்சி முறையில் தோ்வு செய்யப்படுவாா்கள் எனவும் சுரங்கவியல் பிரிவின் இயக்குநா் சி.ஜி.சரவணன் தெரிவித்தாா்.
இந்தக் கலந்தாய்வை அண்ணாமலை பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை பிரிவின் இயக்குநா் பாலபாஸ்கா் வழிகாட்டுதலின்பேரில், அறிவழகன், வெள்ளைமுத்து, சாமிநாதன், கோபிநாதன் ஆகியோா் நடத்தினா்.
கலந்தாய்வை பேராசிரியா்கள் பாலமுருகன், பிரேம்குமாா், சிவராஜன், ராஜசோமசேகரன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.