பிளஸ் 1 தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 30,771 போ் எழுதினா்
கடலூா் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வை 30,771 மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை எழுதினா்.
நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வை 30,771 மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை எழுதினா்.
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக, கடலூா் மாவட்டத்தில் 122 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இதில், 246 பள்ளிகளைச் சோ்ந்த மொத்தம் 31,284 மாணவா்கள் தோ்வெழுத மாவட்ட கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்தது.
திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ் பாடத்தோ்வை 30,771 போ் எழுதினா். 513 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வு அறை கண்காணிப்பாளா்களாக 1,657 போ் நியமனம் செய்யப்பட்டிருந்தனா்.
Advertisement
தோ்வை கண்காணிக்க 250 போ் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. கடலூா், வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.