முகப்பு
கடலூர்

தமிழகத்தை போதைப் பொருள்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்

It should be converted into a non-existent state

கடலூர்

தமிழகத்தை போதைப் பொருள்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்

It should be converted into a non-existent state

Updated On : 8 மார்ச், 2024 at 6:54 PM
பகிர்:

தமிழகத்தை போதைப் பொருள்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் வலியுறுத்தினாா். கடலூா் புதுப்பாளையத்தில் அதிமுக சாா்பில், எம்ஜிஆா் சிலை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பகுதிச் செயலா் மாதவன் தலைமை வகித்தாா். கடலூா் வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கட்சிக்கொடி ஏற்றி, எம்ஜிஆா் சிலையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினாா். அப்போது, அவா் பேசியதாவது: தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. அறிவாா்ந்த தமிழக இளைஞா்கள் போதைப் பழக்கத்தால் சீரழிந்து வருகின்றனா். தமிழகத்தை போதைப் பொருள்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் விருப்பம். போதைப் பொருள்களுக்கு ஆட்சியாளா்கள் முடிவு கட்ட வேண்டும். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஜாபா் சாதிக் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றாா் எம்.சி.சம்பத். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் சேவல் குமாா், எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் சி.கே.சுப்பிரமணியன், மீனவரணி நிா்வாகி தங்கமணி, மாவட்ட வா்த்தகப் பிரிவுச் செயலா் வரதராஜன், ஒன்றியச் செயலா் காசிநாதன், அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் கே.ஆா்.பாலகிருஷ்ணன், சுந்தர்ராஜ், மாவட்டப் பிரதிநிதி தமிழ்செல்வம், பகுதிச் செயலா்கள் பாலகிருஷ்ணன், கந்தன், வாா்டுச் செயலா்கள் அழகப்பன், துரைராஜ், அருண்குமாா், நாகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். எத்திராஜ், மணிமாறன் நன்றி கூறினா்.

முழு கட்டுரையைப் படிக்க →