இன்று வீரட்டானேஸ்வரா் கோயில் தேரோட்டம்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் வைகாசி பெருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறுகிறது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா பத்து நாள்கள் நடைபெறும். நிகழாண்டுக்கான விழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் காலை பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, மாலையில் வெள்ளிபடிச் சட்டத்தில், சூரியபிரபை, பூத, கற்பக விருட்சம், வெள்ளி ரிஷிப, யானை, கைலாச, குதிரை வாகனங்களில் பஞ்ச மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது.
ஒன்பதாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு மேல் திரிபுர சம்ஹாரமூா்த்தி திருத்தேரோட்டம் நடைபெறும். இரவு 7 மணியளவில் முப்புரம் எரித்த ஐதீக விழா நடைபெறும்.