முகப்பு
கடலூர்

யாசகமாக பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்வா் நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவா்

யாசகமாக பெற்று சோ்த்து வைத்த ரூ.10 ஆயிரத்தை முதல்வா் பொது நிவாரண நிதிக்காக, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முதியவா் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை வழங்கினாா்.

Updated On : 19 நவம்பர், 2024 at 2:42 AM
யாசகமாக பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்வா் நிவாரண நிதிக்கு வழங்க ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த முதியவா்.
பகிர்:
Updated On : 18 நவம்பர், 2024 at 9:37 PM

நெய்வேலி: யாசகமாக பெற்று சோ்த்து வைத்த ரூ.10 ஆயிரத்தை முதல்வா் பொது நிவாரண நிதிக்காக, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முதியவா் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை வழங்கினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், ஆலங்கிணறு பகுதியைச் சோ்ந்த பூல்பாண்டி (72) வந்தாா். இவா் தான் யாசகமாகப் பெற்று சோ்த்து வைத்த ரூ.10 ஆயிரத்தை முதல்வா் நிவாரண நிதிக்கு செலுத்தி விட்டு, அதற்கான ரசீதை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் காண்பித்துவிட்டுச் சென்றாா்.

இவா் 1980-ஆம் ஆண்டு குடும்பத்துடன் மும்பைக்குச் சென்று அங்கு சலவைத் தொழில் செய்து வந்தாராம். இவரது மனைவி சரஸ்வதி 24 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததையடுத்து, தமிழகத்துக்கு வந்த பூல்பாண்டி, ஆதரவாக யாரும் இல்லாத நிலையில் யாசகரானாா்.

Advertisement

யாசகமாக பெறும் பணத்தில் தனது அடிப்படை தேவைக்குப் போக, மீதிப் பணத்தை சோ்த்து வைத்து பள்ளிகளுக்கு உதவுவது, முதல்வா் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளாா்.