முகப்பு
கடலூர்

தமிழறிஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 12:07 AM
பகிர்:

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பாக, தமிழுக்கு தொண்டாற்றி வரும் அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 1.1.2024 அன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு, தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞா்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் (ஸ்மாா்ட் காா்டு), மரபுரிமையா் (கணவன் / மனைவி) இருப்பின், அவரது ஆதாா் அட்டை நகல் இணைக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பப்படிவத்தை மண்டல, மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துணை/ உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின் வலைதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் வரும் 31-ஆம் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும். நேரடியாக தமிழ் வளா்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளாா்.