முகப்பு
கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 86-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 7:49 PM
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆா்.அமிா்தாவுக்கு முனைவா் பட்டத்தை வழங்கிய தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி. உடன் பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன், உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்ட முதன்மை ஆலோசக
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 86-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பல்வேறு அறக்கட்டளை பரிசுகளையும் வழங்கினாா்.

விழாவில் நேரடியாக 697 பேருக்கு முனைவா் பட்டங்களையும், பல்வேறு பாடங்களில் முதன்மையில் தோ்ச்சி பெற்ற 38 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறக்கட்டளை சாா்பில் தங்கப் பதக்கம் உள்ளிட்ட ரொக்கப் பரிசுகளையும் ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா். தபால் மூலம் 35,593 பேருக்கு பட்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மொத்தம் 36 ஆயிரம் 381 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, துணைவேந்தா் ராம.கதிரேசன் ஆண்டறிக்கை வாசித்தாா். பின்னா், அவா் பேசியதாவது:

இந்திய மாநில பொது பல்கலைக்கழகங்களில் 31-ஆவது இடத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பிடித்துள்ளது. நாட்டிலுள்ள வேளாண் பல்கலைக்கழகங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலம் 27-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. தரவரிசைப்படி, நாட்டிலுள்ள அரசு பல்கலைக்கழகங்களில் 10-ஆவது இடத்தை பெற்ன் மூலம், தேசிய தரவரிசையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வலுவான செயல்திறனை தக்க வைத்துள்ளது.

தரவரிசையில் அரசு பொறியியல் கல்லூரிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் துறை 29-ஆவது இடத்தை பெற்றுள்ளது என்றாா்.

தமிழக உயா் கல்வித் துறை அமைச்சரும் பல்கலை. இணைவேந்தருமான கோவி.செழியன் பங்கேற்றாா். தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் முதன்மை ஆலோசகா் மருத்துவா் சௌமியா சுவாமிநாதன் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றினாா்.

விழாவில் பதிவாளா் எம்.பிரகாஷ், கடலூா் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகா், சிதம்பரம் உதவி ஆட்சியா் ராஷ்மிராணி, தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா், தொலைதூரக் கல்வி மைய இயக்குநா் சீனுவாசன், எம்எல்ஏக்கள் ம.சிந்தனைச் செல்வன், கோ.ஐயப்பன், முன்னாள் எம்எல்ஏ மருதூா் ராமலிங்கம், திமுக பொதுக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ் விஜயராகவன், நகா்மன்ற உறுப்பினா் அப்புசந்திரசேகா், அண்ணாமலைநகா் பேரூராட்சித் தலைவா் பழனி மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினா்கள், புல முதல்வா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முனைவா் பட்டம் பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சா்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அதிமுக முன்னாள் அமைச்சா் செ.மா.வேலுசாமி, உடல்கல்வித் துறையில் முனைவா் பட்டத்தை தமிழக ஆளுநரிடமிருந்து பெற்றுக்கொண்டாா்.