முகப்பு
கடலூர்

பைக் மீது பேருந்து மோதல்: வழக்குரைஞா் உயிரிழப்பு

கடலூா் அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் வழக்குரைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 30 அக்டோபர், 2024 at 7:43 PM
பகிர்:

கடலூா் அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் வழக்குரைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், லக்கம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் சேகா் மகன் அஜய்கோஷ்(24). இவா், கடலூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றி வந்தாா். புதன்கிழமை அதிகாலை கடலூா்-பண்ருட்டி சாலையில் கோண்டூா் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த தனியாா் பேருந்து, பைக் மீது மோதியது. இதில், அஜய்கோஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.