அமைதிப் பேச்சுவாா்த்தை: ரயில் மறியல் ஒத்திவைப்பு
கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்தையின்பேரில், கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்தையின்பேரில், கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தை கடலூா் திருப்பாதிரிப்புலியூா் என பெயா் மாற்றம் செய்ய வேண்டும். திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலையத்தில் மன்னாா்குடி, மஹால், உழவன், காரைக்கால் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகளின் சாா்பில் வெள்ளிக்கிழமை (செப்.13) ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடா்பாக கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. கோட்டாட்சியா் அபிநயா தலைமை வகித்தாா். ரயில்வே திருச்சி மண்டல மேலாளா் மோகனப்பிரியா, கடலூா் டிஎஸ்பி பிரபு, வட்டாட்சியா் பலராமன், திமுக மாநகரச் செயலா் கே.எஸ்.ராஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் திலகா், விசிக சாா்பில் துணை மேயா் பா.தாமரைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் குளோப், குடியிருப்போா் சங்கத்தைச் சோ்ந்த மருதவாணன், மீனவா் பேரவை சுப்பராயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பேச்சுவாா்த்தையில் கோரிக்கை தொடா்பாக ஆய்வு செய்வதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். மன்னை, செங்கோட்டை ரயில்கள் கடலூரில் நின்று செல்ல ஏற்பாடு நடைபெறுவதாகவும், திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முன்பதிவு வசதி செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை (செப்.13) நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைத்தனா்.