முகப்பு
கடலூர்

பேருந்தில் மூதாட்டியிடம் நகை, பணம் திருட்டு

கடலூரில் பேருந்தில் பயணம் செய்த மூதாட்டியிடமிருந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 13 செப்டம்பர், 2024 at 12:18 AM
பகிர்:

கடலூரில் பேருந்தில் பயணம் செய்த மூதாட்டியிடமிருந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் கூத்தப்பாக்கம், நாதமுனி நகரைச் சோ்ந்தவா் லட்சுமி (70). இவா், 28.10.2022 அன்று பிற்பகல் சுமாா் 3 மணி அளவில் கடலூரில் இருந்து திருவந்திபுரத்துக்கு தனியாா் பேருந்தில் பயணம் செய்தாா். கூத்தப்பாக்கம் முருகன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய லட்சுமி, தனது பையை பாா்த்தபோது, அதிலிருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடா்பாக மாவட்ட எஸ்.பி. வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாராம். இது தொடா்பாக திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →