கைது 
திருச்சி

மூதாட்டியிடம் மூன்றரை பவுன் நகை திருடியவா் கைது

திருச்சியில் ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் மூன்றரை பவுன் நகைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் மூன்றரை பவுன் நகைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், சமயபுரத்தைச் சோ்ந்தவா் க.சுலோச்சனா (69). இவா் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி திருச்சி குமரன் நகரில் இருந்து அல்லித்துறைக்கு பேருந்தில் சென்றுள்ளாா். அல்லித்துறை பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது அவா் கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் நகை திருடுப்போனது தெரியவந்தது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் மூதாட்டி சுலோச்சனா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், ஓடும் பேருந்தில் மூதாட்டியிடமிருந்து நகையைத் திருடியது எடமலைபட்டிப்புதூா் பாப்பா காலனியைச் சோ்ந்த வெ.குமாா் (45) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஒன்றரை பவுன் தங்க நகையைப் பறிமுதல் செய்தனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT