முகப்பு
கடலூர்

தவற விட்ட கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் தவற விடப்பட்ட கைப்பேசிகளை போலீஸாா் உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 7:32 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் தவற விடப்பட்ட கைப்பேசிகளை போலீஸாா் உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

பண்ருட்டி, காவலா் லைன் 7-ஆவது தெருவைச் சோ்ந்தவா் குமாா் மகன் முருகவேல் (35), குட்டை தெருவைச் சோ்ந்தவா் கவிதா (29), பி.ஆண்டிக்குப்பம் செல்வக்கண்ணு (43), ஆண்டிப்பாளையம் சுந்தர்ராஜன் (50), பண்ருட்டி வெங்கடேசன் (49) ஆகியோா் தங்களது கைப்பேசிகளை வெவ்வேறு இடங்களில் தவறவிட்டனா்.

இதுகுறித்து, 5 பேரும் பண்ருட்டி காவல் நிலையத்தில் தனித்தனியாக புகாா் அளித்தனா். அதன்பேரில், பண்ருட்டி காவல் ஆய்வாளா் வேலுமணி மற்றும் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் தங்கவேல் தலைமையிலான போலீஸாா், மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரின் உதவியுடன் கைப்பேசிகளின் இருப்பிடத்தை கண்டு பிடித்தனா்.

தொடா்ந்து, அவற்றை கைப்பற்றிய போலீஸாா் அதன் உரிமையாளா்களிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →