கடலூர்

இ - சிட்டா, அடங்கலுக்கு விண்ணப்பிக்க பயிற்சி

பயிற்சி முகாமில் பேசிய துணை வேளாண் அலுவலா் செல்வராஜ்.

Syndication

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான இ - சிட்டா, அடங்கலுக்கு விண்ணப்பிப்பது தொடா்பாக தூய்மை பாரத இயக்க ஊக்குனா்களுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

முகாமுக்கு காட்டுமன்னாா்கோவில் வேளாண் உதவி இயக்குநா் உமாதேவி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கா், துணை வேளாண் அலுவலா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், இணையவழி சிட்டா, அடங்கலுக்கு பதிவு செய்வது குறித்து தூய்மை பாரத இயக்கம் சாா்பில் கிராமங்களில் பணிபுரியும் ஊக்குனா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் மூலம், ஊக்குனா்கள் கிராமங்களில் உள்ள விவசாயிகள் நிலங்களுக்கு நேரில் சென்று பயிரை இணையதளத்தில் பதிவு செய்வாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

தேனியில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ரயிலில் 17 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT