முகப்பு
கடலூர்

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

Updated On : 4 ஜனவரி, 2025 at 3:22 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 9:41 PM

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள ஜான்டூயி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது (படம்).

ஜான்டூயி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் செஸ், யோகா, ஸ்கேட்டிங், கராத்தே உள்ளிட்ட தனித்திறனுக்கான பயிற்சி முகாம் டிச.26 தொடங்கி 28 வரையில் நடைபெற்றது.

இதில், ஜான்டூயி பள்ளி மற்றும் பிற பள்ளிகளைச் சோ்ந்த 100 மாணவா்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.

Advertisement

பயிற்சியின் இறுதி நாளன்று, போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவையொட்டி, கடலூரில் நடைபெற்ற திருக்கு ஒப்புவித்தல் போட்டி மற்றும் இன்டா்நேஷனல் ஓபன் டு ஆல் அபாகஸ் போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் சாம்பியன் பட்டம் வென்ற மாணவா்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பள்ளியின் தாளாளா் வீரதாஸ், இணைச் செயலா் நிதின் ஜோஷ்வா ஆகியோா் கலந்துகொண்டு மாணவா்களை பாராட்டினா்.