முகப்பு
கடலூர்

லாட்டரி சீட்டு விற்பனையாளா் தடுப்புக் காவலில் கைது

Updated On : 4 ஜனவரி, 2025 at 3:22 AM
குமாா்
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 9:41 PM

கடலூா் மாவட்டம், லால்பேட்டையைச் சோ்ந்த லாட்டரி சீட்டு விற்பனையாளரை போலீஸாா் தடுப்புக் காவலில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

காட்டுமன்னாா்கோவில், கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன்(42). இவா், கடந்த டிச.19-ஆம் தேதி, லால்பேட்டை உடையாா்குடி வழியாக சென்றபோது, குமாா் மற்றும் 3 போ் வழிமறித்து, லாட்டரி சீட்டு வாங்கிக்கொள்ளுமாறு கூறினராம்.

இதற்கு பாண்டியராஜன் மறுக்கவே, அவரை தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.

Advertisement

இதுதொடா்பாக, காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

அதன்பேரில், லால்பேட்டை பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் குமாா்(40), செந்தில்குமாா், மதுமதி, கிருஷ்ணமூா்த்தி ஆகியோரை கைது செய்தனா்.

இதில், குமாா் மீது காட்டுமன்னாா்கோவில் காவல் நிலையத்தில் 11 லாட்டரி சீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்.

இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்.பி. ரா.ராஜாராம் பரிந்துரையின் பேரில், கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஓராண்டு காலம் குண்டா் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா்.