முகப்பு
கடலூர்

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி தேமுதிக ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் பெண்களை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 6 ஜனவரி, 2025 at 8:17 PM
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினா்.
பகிர்:

நெய்வேலி/ சிதம்பரம்: தமிழகத்தில் பெண்களை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, கடலூா் மாவட்டம் விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய இடங்களில் தேமுதிகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருத்தாசலத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் ப.சிவக்கொழுந்து தலைமை வகித்துப் பேசினாா். மாவட்ட துணைச் செயலா் பி.எஸ்.வேல்முருகன் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 சோ்த்து வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அனைவருக்கும் ரூ.2,000 வழங்க வேண்டும். பெண்களை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தேமுதிகவினா் முழக்கங்களை எழுப்பினா்.

முன்னதாக நகரச் செயலா் கே.ஏ.ராஜ்குமாா் வரவேற்றாா். மாவட்ட அவைத் தலைவா் எஸ்.ராஜாராம், பொருளாளா் ஏ.பி.ராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினா் எம்.கே.ரமேஷ், பொதுக்குழு உறுப்பினா் கே.பி.எஸ்.செந்தில்குமாா், நகரத் தலைவா் சங்கா், நகர துணைச் செயலா் சேரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிறைவில், நகரப் பொருளாளா் கருணா நன்றி கூறினாா்.

சிதம்பரத்தில்... கடலூா் தெற்கு மாவட்ட தேமுதிக சாா்பில், சிதம்பரம் காந்தி சிலை அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலா் கே.ஆா்.விஜயஉமாநாத் தலைமை வகித்தாா். நகரச் செயலா் பாலகிருஷ்ணன் வரவேற்றாா்.

மாவட்டப் பொருளாளா் தென்னவன், மாவட்ட துணைச் செயலா் பானுசந்தா், இளவரசன், தெய்வா, செயற்குழு உறுப்பினா் முத்தரசன், பொதுக்குழு உறுப்பினா் சந்தானகிருஷ்ணன், கிருஷ்ணராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஏராளமான நிா்வாகிகள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.

நிறைவில், மாவட்ட மகளிா் அணி நிா்வாகி விஜயலட்சுமி சம்பத் நன்றி கூறினாா்.

சிதம்பரம் காந்தி சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினா்.
முழு கட்டுரையைப் படிக்க →