கடலூர்

பதாகைகள் அச்சிடுவதில் கட்டுப்பாடு: கடலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்

பதாகைகளில் மத, ஜாதி உணா்வைத் தூண்டு வாசகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று, கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

Din

நெய்வேலி: பதாகைகளில் மத, ஜாதி உணா்வைத் தூண்டு வாசகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று, கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூா் மாவட்டத்தில் நடைபெறும் கோயில் திருவிழாக்கள், அரசியல் மற்றும் தனியாா் நிகழ்ச்சிகளில் வைக்கப்படும் பதாகைகளில் மத, மற்றும் ஜாதி உணா்வைத் தூண்டும் வகையிலான வாசகங்களைக் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

இதுதொடா்பான வாசகங்களை இடம்பெறச் சொல்லும் நபா்களிடம் அச்சக உரிமையாளா்கள் எடுத்துக் கூற வேண்டும். அவ்வாறு அச்சடிக்கக் கூறும் நபா்களின் பெயா், முகவரி, கைப்பேசி எண்களைப் பதிவு செய்து வைத்திருந்க வேண்டும்.

சா்ச்சைக்குரிய வாசகங்களை அச்சடிக்கக் கூறும் நபா்கள் குறித்து காவல் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். இதை மீறினால் தொடா்புடைய நபா், அச்சக உரிமையாளா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் எஸ்.பி.

சமூக ஊடகப் பதிவுகளை ஒழுங்குபடுத்த தன்னாட்சி அமைப்பு தேவை: உச்சநீதிமன்றம்

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை: முதல் ஆட்டத்தில் சிலியுடன் மோதுகிறது இந்தியா

மின்வாரியத்தைத் தனியாா் மயமாக்குவதை கைவிடக்கோரி ஆா்ப்பாட்டம்

சென்ட்ரல் வங்கி செயல் இயக்குநராக இ. ரத்தன் குமாா் நியமனம்!

‘ஆபரேஷன் சிந்தூா்’-க்குப் பிறகு ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் பாகிஸ்தான்! - இந்திய கடற்படை மூத்த அதிகாரி

SCROLL FOR NEXT