காட்டுமன்னாா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற வீரநாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம். 
கடலூர்

வீரநாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம்

காட்டுமன்னாா்கோவிலில் ஸ்ரீமரகதவல்லி சமேத ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

Din

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவிலில் ஸ்ரீமரகதவல்லி சமேத ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

இந்தக் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா கடந்த ஏப்.20-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

அலங்காரம் செய்யப்பட்டு தேரில் ருக்மணி, சத்தியபாமா சமேத ஸ்ரீ ராஜகோபாலன், ஸ்ரீமன் நாதமுனிகள், ஆகிய உற்சவமூா்த்திகளை எழுந்தருள செய்தனா். பின்னா், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தேரோட்டத்தை பேரூராட்சி மன்றத் தலைவா் கணேசமூா்த்தி தொடங்கிவைத்தாா்.

அறங்காவலா் குழுத் தலைவா் ஜிவிஎஸ்.கல்யாணசுந்தரம், துணைத் தலைவா் மணிமாறன், செயல் அலுவலா் செல்வமணி, கணக்காளா் வெங்கடேசன் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தோ் மீண்டும் நிலையை அடைந்தது.

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

SCROLL FOR NEXT