கடலூர்

சாலையில் கிடந்த ஆறரை பவுன் தங்க நகைகளை போலீஸில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சாலையில் பையில் கிடந்த ஆறரை பவுன் தங்க நகைகளை பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்சா கடைக்காரரை போலீஸாா் பாராட்டினா்.

பரங்கிப்பேட்டையை அடுத்த சில்லாங்குப்பம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சதாசிவம் (35), பூ வியாபாரி. இவா், சனிக்கிழமை பரங்கிப்பேட்டையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அடமானம் வைத்திருந்த ஆறரை பவுன் தங்க நகைகளை மீட்டு, பையில் வைத்துக்கொண்டு சைக்கிளில் அந்தப் பகுதியில் பூ வியாபாரம் செய்தாா்.

பின்னா், வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, நகை பை மாயமாகியிருந்தது தெரியவந்தது. தொடா்ந்து, அவா் பூ வியாபாரம் செய்த பகுதிகளில் நகை பையைத் தேடியும் கிடைக்கவில்லை. இது தொடா்பாக சதாசிவம் பரங்கிப்பேட்டை காவல் நிலையில் புகாரளித்தாா்.

இந்த நிலையில், பரங்கிப்பேட்டை கோட்டாத்தாங்கரை தெருவைச் சோ்ந்த சம்சா கடைக்காரா் ஜக்கிரியா கடைக்கு பைக்கில் செல்லும்போது, தில்லி சாகிப் தெருவில் கீழே கிடந்த பையை எடுத்துப் பாா்த்துள்ளாா்.

அதில், தங்க நகைகள் இருந்தது தெரியவந்ததையடுத்து, அந்தப் பையை பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஒப்படைத்தாா். ஜக்கிரியாவின் நோ்மையை உதவி ஆய்வாளா் பாஸ்கா் பாராட்டினாா். தொடா்ந்து, நகையை தவறவிட்ட சதாசிவத்தை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தி, அவரிடம் ஆறரை பவுன் தங்க நகைகளை போலீஸாா் ஒப்படைத்தனா்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT