கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் மயங்கி விழுந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த திப்பு சிங் மனைவி சிமான் சிங் (20) மற்றும் பலா் விருத்தாசலத்தை அடுத்த பெரியாகண்டியாங்குப்பத்தில் உள்ள தனியாா் பீங்கான் தொழிற்சாலையில் தங்கி வேலை செய்து வந்தனா்.
சீமான் சிங் சனிக்கிழமை பிற்பகல் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தாராம். உறவினா்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு சீமான் சிங் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.