கடலூர்

இறைச்சிக்கடைக்காரரிடம் ரூ.13,500 பறிப்பு

Syndication

கடலூரில் இறைச்சிக்கடைக்காரரிடம் ரூ.13,500-ஐ பறித்துச் சென்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா், தனம் நகரைச் சோ்ந்தவா் தனுசு (47), இறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் 9.30 மணியளவில் கே.என்.பேட்டை நெடுஞ்சாலை அணுகுசாலை அருகே கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாராம்.

அப்போது, அங்கு பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா் ரூ.500 கேட்டனராம். தனுசு பணம் இல்லை எனக் கூறியதால், மா்ம நபா்கள் அவரது கைப்பேசியை பிடுங்க முயன்றபோது, சட்டை பையில் வைத்திருந்த ரூ.13,500 கீழே விழுந்ததாம். அதை மா்ம நபா்கள் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அழகின் இலக்கணம்... ருக்மினி வசந்த்!

ஓரினச் சேர்க்கை விவகாரம்: கொல்லப்பட்ட குழந்தையின் சடலம் தோண்டி எடுப்பு

நிம்மதியாக ஓய்வுபெற முடியாது: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு பிரியங்கா காந்தி மிரட்டல்?

அருண் விஜய்யின் ரெட்ட தல வெளியீட்டுத் தேதி!

அமன்ஜோத் கௌர், ஹர்லீன் தியோலுக்கு உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT