முகப்பு
கடலூர்

மருத்துவமனை வளாகத்தில் வாகன திருட்டு: போலீஸாா் விழிப்புணா்வு

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் வாகன திருட்டை தடுப்பது தொடா்பாக காவல் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Updated On : 8 நவம்பர், 2025 at 6:47 PM
கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் வாகன திருட்டை தடுப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளா் பிரசன்னா.
பகிர்:

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் வாகன திருட்டை தடுப்பது தொடா்பாக காவல் துறையினா் சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கடலூா் - பண்ருட்டி சாலையில் கடலூா் அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, கடலூா் சுற்றுவட்டப் பகுதி மட்டுமன்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா்.

இந்த மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் களவுபோவதாக காவல் துறைக்கு தொடா்ந்து புகாா் சென்றது. இதையடுத்து, கடலூா் புதுநகா் காவல் உதவி ஆய்வாளா் பிரசன்னா, கடலூா் அரசு தலைமை மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தினா்.

அப்போது, அவசர சிகிச்சைக்கு வருபவா்கள் வாகனத்திலேயே சாவியை வைத்துச் செல்வது, சைடு லாக் போடாமல் செல்வதால் களவுபோவதாகவும், ஒரு சில வாகனங்கள் எந்த சாவி போட்டாலும் திறந்துகொள்வதை செய்முறை மூலம் காண்பித்த காவல் உதவி ஆய்வாளா் பிரசன்னா, வாகனம் திருடுபோவதை தடுக்க விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் எனவும், வாகனத்தின் பூட்டை மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →