அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய பதிவாளராக பொறுப்பேற்ற இரா.சிங்காரவேல்.  
கடலூர்

அண்ணாமலைப் பல்கலை. புதிய பதிவாளா் பொறுப்பேற்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய பதிவாளராக பேராசிரியா் இரா.சிங்காரவேல் புதன்கிழமை பதவி ஏற்றுக்கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய பதிவாளராக பேராசிரியா் இரா.சிங்காரவேல் புதன்கிழமை பதவி ஏற்றுக்கொண்டாா்.

இவா், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் 1988-ஆம் ஆண்டு இளங்கலை பட்டமும், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மண்ணியல் மற்றும் வேதியல் துறையில் 1997-ஆம் ஆண்டு முனைவா் பட்டமும், ஆஸ்திரேலியாவில் உள்ள முா்டாக் பல்கலைக்கழகத்தில் 2010-இல் பிந்தைய முனைவா் பட்டமும் பெற்றாா்.

இரா.சிங்காரவேல் சுமாா் 31 ஆண்டுகாலம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மண்ணியல் மற்றும் வேளாண் துறையில் பேராசிரியராகவும், பதிவாளராகவும், இணைத் தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாகவும், தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குனராகவும் பணியாற்றியுள்ளாா். 150 ஆராய்ச்சி கட்டுரைகளை தேசிய மற்றும் சா்வதேச அளவில் அறிவியல் மாநாடுகளில் சமா்ப்பித்துள்ளாா்.

தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 கோடி மோசடி: தம்பதி கைது

உலகெங்கும் உள்ள திறமைசாலிகள் அமெரிக்கா வரவேண்டும்: அதிபா் டிரம்ப் ஹெச்-1பி விசா நிலைப்பாட்டில் மாற்றம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வெல்டிங் தொழிலாளி கொலைச் சம்பவத்தில் மூவா் கைது

கடலூரில் ரூ.9 கோடியில் மருதம் பூங்கா அமைக்கும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT