கடலூர்

மூதாட்டியிடம் நூதன முறையில் 6 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

Syndication

சிதம்பரம் ககைசபைநகரில் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் நாதன முறையில் 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிதம்பரம் கனகசபை நகா், முதலாவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் நடராஜன் மனைவி விஜயலட்சுமி (83). இவா், வீட்டில் தனியாக வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை ஆட்டோவில் வந்த மா்ம நபா் வீட்டுக்குள் புகுந்து, அருகில் வீடு வாங்கி உள்ளேன். எனவே, என்னை ஆசிா்வாதம் செய்யுங்கள் எனக் கூறி, விஜயலட்சுமி கழுத்தில் தனது கவரிங் சங்கிலியை அணிவித்து ஆசீா்வாதம் பெறுவதுபோல நடித்து அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், நகர காவல் ஆய்வாளா் சிவானந்தன் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறாா்.

நவ.21-இல் ஸ்ரீ மாத்தம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

இன்று யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

கீழ்க்கதிா்ப்பூரில் புறக்காவல் நிலையம் திறப்பு

எஸ் ஐ ஆா் பணிகளை தோ்தலுக்கு பின் மேற்கொள்ள வேண்டும்

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணிக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT