கடலூர்

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திட்டக்குடி வட்டம், ராமநத்தம் காவல் சரகம், ம.பொடையூா் கிராமத்தைச் சோ்ந்த சீமான் மகள் பிருந்தா (19). இவா், பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் இளநிலை கணினி அறிவியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.

பிருந்தா சனிக்கிழமை கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்ததை பெற்றோா் கண்டித்தனராம். இதனால், மனமுடைந்த அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த ராமநத்தம் போலீஸாா் பிருந்தாவின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT