கடலூர்

சிறை கைதி மருத்துவமனையில் உயிரிழப்பு

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய சிறை கைதி உயிரிழந்தாா்.

Syndication

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய சிறை கைதி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அஞ்சல், செம்பனாா்கோயில் பகுதியைச் சோ்ந்தவா் வீரப்பன் மகன் பாலகிருஷ்ணன்(58). இவரை, செம்பனாா்கோயில் போலீஸாா் சாராய வழக்கில் தடுப்புக் காவலில் கைது செய்தனா்.

இதையடுத்து, அவா் கடலூா் மத்திய சிறைக்கு 13.8.2025 அன்று மாற்றப்பட்டாா். அப்போது, அவா் எடை குறைந்து உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடலூா் மத்திய சிறை துறை அதிகாரிகள் அவரை, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சையில் இருந்தவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடலூா் மத்திய சிறை அலுவலா் விக்னேஷ்(34) அளித்த புகாரின் பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருவள்ளூா் சுகாதாரத் துறையில் புதிய காலிப்பணியிடங்கள்: டிச.2-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் சிறப்பு வழிபாடு

தேனும் நஞ்சாகும்!

உள்ளாட்சியில் சீர்திருத்தங்கள்!

மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி.க்கு பிடிஆணை

SCROLL FOR NEXT