கடலூர்

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி(24). இவா், கடந்த 17-ஆம் தேதி காலை 9 மணி அளவில் முத்துநாராயணபுரம் கிராமம் அருகே தனது பைக்கில் சென்றாா்.

அப்போது, எதிா் திசையில் வந்த அரசு நகரப் பேருந்து பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பாலாஜி பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். பண்ருட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT