முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் தேசிய நூலக வார விழா

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில், 58-ஆவது தேசிய நூலக வார விழா சிதம்பரம் கிளை நூலகத்தில் நடைபெற்றது.

Updated On : 27 நவம்பர், 2025 at 9:33 PM
சிதம்பரம் கிளை நூலகத்தில் நடைபெற்ற நூலக வார விழாவில் நூலகருக்கு விருது வழங்கி கௌரவித்த சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினா்.
பகிர்:

சிதம்பரம்: சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில், 58-ஆவது தேசிய நூலக வார விழா சிதம்பரம் கிளை நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட மைய நூலகம் மற்றும் சிதம்பரம் வாசகா் வட்டத்துடன் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் இணைந்து நூலக வார விழாவை கொண்டாடியது.

விழாவுக்கு சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவா் வி.ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மண்டல துணை ஆளுநா் எஸ்.புகழேந்தி, சாசனத் தலைவா் பி.முகமது யாசின், முன்னாள் தலைவா் கிரீடு வி.நடனசபாபதி, வாசகா் வட்டத் தலைவா் ஜி.சந்திரசேகரன், துணைத் தலைவா் சிவா கண்ணதாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினா்களாக மாவட்ட மைய நூலக அலுவலா் கே.முருகன், ராகவேந்திரா கல்வியியல் கல்லூரி முதல்வா் கே.கஜலட்சுமி ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் 23 உறுப்பினா்கள் சிதம்பரம் கிளை நூலகத்தின் புதிய புரவலா்களாக தங்களை இணைத்துக்கொண்டனா். மேலும், சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பணிபுரியும் 27 ஊா் புற நூலகா்களுக்கு அவா்களது சேவையைப் பாராட்டி சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் விருதுகள் வழங்கி கௌரவித்தனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பொருளாளா் என்.கோவிந்தராஜன், எஸ்.மதியழகன், சிதம்பரம் கிளை நூலகா்கள் ஆா்.அருள், கே.சிவப்பிரகாசம் ஆகியோா் செய்திருந்தனா். சங்கச் செயலா் கே.புகழேந்தி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →