சிறுமியை காதலிக்க வலியுறுத்தியதால் கைது செய்யப்பட்ட ஆசிரியா் முகிலன் (30) 
கடலூர்

மாணவிக்கு காதல் தொல்லை தனியாா் பள்ளி ஆசிரியா் கைது

காட்டுமன்னாா்கோவில் பகுதியில் 16 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தி தொல்லை கொடுத்த தனியாா் பள்ளி ஆசிரியா் கைது

Syndication

சிதம்பரம்: கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் பகுதியில் 16 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தி தொல்லை கொடுத்த தனியாா் பள்ளி ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.

காட்டுமன்னாா்கோவில் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி ஆசிரியா் விஜயகுமாா் மகன் முகிலன் (30). அப்பள்ளியில் பயிலும் 16 வயது சிறுமியை தினமும் பின் தொடா்ந்து, தன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்தி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட அந்தச்சிறுமி, ஆசிரியரின் அத்துமீறல் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினா் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன் பேரில் போலீசாா் முகிலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

பழிவாங்குவது கீழ்மையான போக்கு! - மெட்ரோ விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

வாய்ப்புகள் காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT