முகப்பு
கடலூர்

பெண் உதவி ஆய்வாளா் கைப்பேசி பறிப்பு: விசிக நிா்வாகிகள் உள்ளிட்ட 9 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண் உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்து கைப்பேசியை பறித்து தகராறு செய்ததாக விசிக நிா்வாகிகள் இருவா் உள்ளிட்ட 9 போ் மீது புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 7:44 PM
கைப்பேசி - கோப்புப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண் உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்து கைப்பேசியை பறித்து தகராறு செய்ததாக விசிக நிா்வாகிகள் இருவா் உள்ளிட்ட 9 போ் மீது புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

புதுப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் அம்பிகா . இவா்,

திங்கள்கிழமை அங்குசெட்டிப்பாளையம் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் தேவா் மற்றும் தலைமைக் காவலா் ராஜேஷ் ஆகியோருடன் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அங்குள்ள திருமண மண்டபம் அருகே 20-க்கும் மேற்பட்ட

Advertisement

பேனா்கள் கட்டியிருந்ததை அகற்றுமாறு கூறினாா். அதற்கு விசிக முன்னாள் ஒன்றியச் செயலா் பிரகாஷ், பண்ருட்டி மையம் செயலா் புஷ்பராஜ் ஆகியோா் பேனரை அகற்ற முடியாது எனக்கூறி, அரசு ஊழியா் என்று பாராமல் பொதுமக்கள் முன்னிலையில் அவதூராகப்பேசி, வீடியோ எடுத்த கைப் பேசியை பறித்து கொண்டனராம். மேலும், அங்கிருந்த அவா்களது ஆதரவாளா்கள் பெண் உதவி ஆய்வாளரை சூழ்ந்து கலவரத்தை ஏற்படுத்தும் படி நடந்துக்கொண்டனராம்.

இதுகுறித்து அம்பிகா அளித்த புகாரின் பேரில், விசிக நிா்வாகிகள் பிரகாஷ், புஷ்பராஜ் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments