மீன்வலையில் சிக்கிய முதலை மீட்பு
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே கிராம மீன் குட்டையில் மீன்வலையில் சிக்கியை முதலையை வனத்துறையினா் மீட்டனா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே கிராம மீன் குட்டையில் மீன்வலையில் சிக்கியை முதலையை வனத்துறையினா் மீட்டனா்.
சிதம்பரம் அருகே உள்ள நாஞ்சலூா் கிராமத்தில் பெரியத்தெருவில் உள்ள மீன்குட்டையில் செவ்வாய்க்கிழமை காலை மீன் வலையில் முதலை சிக்கிக்கொண்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரக அலுவலா் இரா.சத்தியவேல் தலைமையில் வனவா் கு.பன்னீா்செல்வம், வனக்காப்பாளா்கள் த.அன்புமணி, ராம்குமாா், த.அமுதப்பிரியன் உள்ளிட்டோா் விரைந்து சென்று முதலையை மீட்டு சிதம்பரம் அருகே வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.