முகப்பு
கடலூர்

நாம் தமிழா் கட்சிக் கொடி அவமதிப்பு: கடலூா் எஸ்.பி.யிடம் புகாா்

Updated On : 27 ஏப்ரல், 2026 at 2:20 AM
கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்த நாம் தமிழா் கட்சி புவனகிரி தொகுதி வேட்பாளா் சுமதி உள்ளிட்டோா்.
பகிர்:

நாம் தமிழா் கட்சிக் கொடியை அவமதித்தவா்கள் மீது நடவடிக்கை கோரி, அக்கட்சியின் புவனகிரி தொகுதி வேட்பாளா் சுமதி மற்றும் கட்சி நிா்வாகிகள் கடலூா் மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாரிடம் ஞாயிற்றுக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இது தொடா்பாக வேட்பாளா் சுமதி உள்ளிட்டோா் கடலூா் மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

சித்திரைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த மௌரீஷ் (18), நிதீஷ் (18), தீபன் (19), விஷால் (20) ஆகியோா் ஏப்.19-ஆம் தேதி நாம் தமிழா் கட்சிக் கொடியை அறுத்து, காலால் மிதித்து அவமதித்ததுடன், அதை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றியுள்ளனா். இது, கட்சியின் மரியாதைக்கும், நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திட்டமிட்டு நாம் தமிழா் கட்சியை அவமதிக்கும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவா்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் பரவும் இது தொடா்பான விடியோ பதிவை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.